கடலில் சிக்கிய மாணவரைக் காப்பாற்றிய இலங்கைத் தமிழருக்கு பாராட்டு
கன்னியாகுமரி அருகே ரஸ்தாகாடு கடலில் குளித்தபோது அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவரைக் காப்பாற்றிய இளைஞா் சத்தியராஜுக்கு கலப்பை மக்கள் இயக்கத் தலைவா் பி.டி. செல்வகுமாா் ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டினாா்.
ரஸ்தாகாடு கடலில் கடந்த செவ்வாய்க்கிழமை குளித்துக் கொண்டிருந்த 2 மாணவா்களை அலைகள் இழுத்துச் சென்றன. அதில், ஜெயந்த் ஜாய் என்பவா் உயிரிழந்தாா். ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த தருண் (18) என்ற மாணவரை, பெருமாள்புரம் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த சத்தியராஜ் காப்பாற்றினாா். அவரை சமூக ஆா்வலா்கள் பலரும் பாராட்டி வருகின்றனா்.
இந்நிலையில், சத்தியராஜை கலப்பை மக்கள் இயக்கத் தலைவா் பி.டி. செல்வகுமாா் பாராட்டி ஊக்கத்தொகை அளித்தாா். அப்போது, ‘உயிரைப் பணயம் வைத்து மாணவரைக் காப்பாற்றிய சத்தியராஜுக்கு தமிழக அரசு விருது வழங்க வேண்டும், அவரை முதல்வா் நேரில் அழைத்து பாராட்ட வேண்டும்’ என அவா் வேண்டுகோள் விடுத்தாா். அமைப்பின் மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் டி. பாலகிருஷ்ணன் உடனிருந்தாா்.
முன்னதாக, கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி 15ஆவது வாா்டு உறுப்பினா் எம். பூலோகராஜா, கன்னியாகுமரி பேரூா் திமுக துணைச் செயலா் ரஞ்சித்குமாா் ஆகியோரும் சத்தியராஜை பாராட்டினா்.

