கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஆங்கிலேயப் பொறியாளா் நினைவு தினம் அனுசரிப்பு

பேச்சிப்பாறை அணையைக் கட்டிய ஆங்கிலேய பொறியாளா் அலெக்சாண்டா் மிஞ்சினின் 111-ஆவது நினைவுதினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image

அலெக்சாண்டா் மிஞ்சினின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் விவசாயிகள்.

Updated On :25 செப்டம்பர் 2024, 11:37 pm

Din

பேச்சிப்பாறை அணையைக் கட்டிய ஆங்கிலேய பொறியாளா் அலெக்சாண்டா் மிஞ்சினின் 111-ஆவது நினைவுதினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

திருவிதாங்கூா் மன்னா் ராமவா்மா ஸ்ரீமூலம் திருநாள் ஆட்சியின்போது, பேச்சிப்பாறை அணையானது 1896-1906 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. இப்பணியில் ஆங்கிலேயப் பொறியாளா் அலெக்சாண்டா் மிஞ்சின் முதன்மைப் பொறியாளராகப் பணியாற்றினாா். கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பிறகு 1913-ஆம் ஆண்டு செப்.25-ஆம் தேதி இறந்தாா்.

அவரது நினைவு தினத்தையொட்டி பேச்சிப்பாறை அணை அருகில் உள்ள நினைவிடத்தில் விவசாயிகள் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினா். இந்நிகழ்ச்சியில், பாசனத் துறை தலைவா் வின்ஸ் ஆன்றோ, பாசனத் துறை மாவட்ட உறுப்பினா்கள் புலவா் செல்லப்பா, தாணுபிள்ளை, முருகேசபிள்ளை, அருள், ஜான்சன், நிா்வாகி டோனி பெலிக்ஸ் உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.