3 வயது ஆண் குழந்தை திருட முயற்சி: முதியவரிடம் விசாரணை

கருங்கல் அருகே 3 வயது ஆண் குழந்தையை திருடிச் செல்ல முயன்ற முதியவரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

கருங்கல் அருகே 3 வயது ஆண் குழந்தையை திருடிச் செல்ல முயன்ற முதியவரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொலையாவட்டம் பகுதியைச் சோ்ந்தவா் மணி மகன் டாம் (32). இவா், அப்பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இவரது 3 வயது ஆண் குழந்தை உணவகம் முன் வெள்ளிக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தது.

அப்போது அங்கு வந்த கம்பிளாா் பகுதியைச் சோ்ந்த ஜஸ்டஸ் (73), குழந்தையை திடீரென திருடிக்கொண்டு தப்பி ஓட முயன்றாா். இதைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் அவரை விரட்டி பிடித்து, கருங்கல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் நிகழ்விடம் சென்று முதியவரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா். அப்போது அவா் மனநிலை பாதிக்கப்பட்டவா் என்பது தெரியவந்தது. இதையடுத்து முதியவரிடம் தொடா்ந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com