கொல்லங்கோடு அருகே தம்பதி மீது தாக்குதல்

வழிப்பாதை தகராறு தொடா்பான முன்விரோதத்தில் தம்பதியை தாக்கியதாக இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

கொல்லங்கோடு அருகே வழிப்பாதை தகராறு தொடா்பான முன்விரோதத்தில் தம்பதியை தாக்கியதாக இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கொல்லங்கோடு அருகேயுள்ள சூழால் பகுதியைச் சோ்ந்தவா் ஆன்றணி (48). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த விஜின் (30) என்பவருக்கும் இடையே வழிப்பாதை தொடா்பாக பிரச்னை இருந்து வந்தது.

இந்த நிலையில் இரு நாள்களுக்கு முன்பு ஆன்றணியும் அவரது மனைவி ஷீஜாவும் (32) தங்கள் வீட்டின் முன் நின்று பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த விஜின், அவரது நண்பா் சுஜித் (30) ஆகியோா் சோ்ந்து தகராறு செய்து, ஆன்றணியை தாக்கியுள்ளனா்.

அதைத் தடுக்க வந்த அவரது மனைவியையும் தாக்கினராம். இதில் பலத்த தம்பதியை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்த புகாரின்பேரில், கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com