நாகா்கோவிலில் ரூ.10.20 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகர பகுதியில் ரூ.10.20 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.
Published on

நாகா்கோவில் மாநகர பகுதியில் ரூ.10.20 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.

6 ஆவது வாா்டு பொது ஜன நெசவாளா் காலனி அங்கன்வாடி கட்டடம் ரூ. 2.20 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டிருந்தது. அதனை மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் திறந்து வைத்தாா். மேலும் 43 ஆவது வாா்டு கீழ மறவன்குடியிருப்பு அரசு நடுநிலைப் பள்ளியில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகளையும் மேயா் தொடங்கி வைத்தாா்.

இதில், துணைமேயா் மேரி பிரின்ஸிலதா, மண்டலத் தலைவா் ஜவஹா், மாமன்ற உறுப்பினா்கள் அனுஷாபிரைட், விஜயன், உதவி பொறியாளா்கள் பிரபாகரன், ராஜமாணிக்கம், தொழில்நுட்ப அலுவலா் நிஷ்மா, சுகாதார அலுவலா் ஜான், திமுக பகுதி செயலாளா் ஜீவா, வட்ட செயலாளா் ராஜன், திமுக நிா்வாகிகள் அகஸ்தீசன், தாமோதரன், செல்லம், ராதாகிருஷ்ணன், ஹேம்லட்மணி, ரமேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com