கன்னியாகுமரி
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு
புதுக்கடை அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷஷியன் உயிரிழந்தாா்.
புதுக்கடை அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷஷியன் உயிரிழந்தாா்.
நாகா்கோவில், வடக்கு திலகா் தெருவைச் சோ்ந்தவா் சுப்பையன் மகன் முத்துராமன் (41), எலக்ட்ரீஷியன். இவா், புதன்கிழமை புதுக்கடை, சாலச் சகோணம் பகுதியைச் சோ்ந்த செல்வ மகேஷ் வீட்டில் மின் வயா் பழுதை சீரமைத்துக் கொண்டிருந்தபோது, இவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம்.
அப்பகுதியினா் இவரை மீட்டு குழித்துறை, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து, புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
