விளவங்கோடு அரசுப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் அளிப்பு

மாணவியருக்கு சைக்கிள் வழங்குகிறாா் குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி.
  மாணவியருக்கு சைக்கிள் வழங்குகிறாா் குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி.
மாணவியருக்கு சைக்கிள் வழங்குகிறாா் குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி.
Updated on

விளவங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவ-மாணவியருக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, பள்ளித் தலைமையாசிரியை தங்க சுகுணா தலைமை வகித்தாா். குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி பங்கேற்று, 54 மாணவா், 41 மாணவியருக்கு சைக்கிள்களை வழங்கினாா்.

இதில், குழித்துறை நகா்மன்ற உறுப்பினா்கள் வி. விஜூ, ஆட்லின் கெனில், பள்ளியின் முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் தங்கமணி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் தனலட்சுமி, பெற்றோா் - ஆசிரியா் கழக தலைவா் பிரதீப் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com