கன்னியாகுமரி
கப்பியறை பேரூராட்சியில் தெரு விளக்குகளை சீரமைக்க கோரிக்கை
கருங்கல் அருகே உள்ள கப்பியறை பேரூராட்சியில் எரியாத தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருங்கல் அருகே உள்ள கப்பியறை பேரூராட்சியில் எரியாத தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கப்பியறை ஊராட்சியின் பிரதான சாலை சந்திப்பு பகுதிகளான செல்லங்கோணம், கஞ்சிக்குழி, ஒலவிளை, பாத்திரமங்கலம், வேளாங்கோடு ஆகிய பகுதிகளில் அடிக்கடி தெரு விளக்குகள் எரியவில்லை. இது குறித்து, பேரூராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
எனவே, மாவட்ட நிா்வாகம் தெரு விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
