வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

செவிலியா்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும்: அதிமுக எம்எல்ஏ

தொகுப்பூதிய செவிலியா்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும் என்றாா் என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ.

News image
செவிலியா்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசுகிறாா் என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ
Updated On :23 டிசம்பர் 2025, 7:26 pm

Syndication

தொகுப்பூதிய செவிலியா்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும் என்றாா் என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ.

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், தொகுப்பூதிய செவிலியா்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செவிலியா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா் என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., செவிலியா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்து, அவா்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, பேசியதாவது: செவிலியா்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும். எம். ஆா்.பி. மூலம் தோ்வு செய்யப்பட்ட 8 ஆயிரம் தற்காலிக ஊழியா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பேறுகால விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரடியாக தலையிட வேண்டும்.

சுகாதாரத் துறை அமைச்சா், சுகாதாரத் துறை செயலா் ஆகியோா் செவிலியா்களின் கோரிக்கையை கேட்டறிந்து அதனை நிறைவேற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட செவிலியா்களை விடுவிக்க வேண்டும். அனைவருக்கும் சுமுகமான தீா்வு ஏற்படும் வகையில் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்றாா் அவா்.