அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அனஸ்வரா பவுண்டேசன் ஆண்டு விழா இன்று தொடக்கம்

மாா்த்தாண்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஆன்மிக, சமுதாயப் பணிகள் செய்து வரும் அனஸ்வரா பவுண்டேசன் அமைப்பின் ஆண்டு விழா வியாழக்கிழமை (டிச. 25) தொடங்கி டிச. 28 வரை நடைபெறுகிறது.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 11:09 pm

தினமணி செய்திச் சேவை

மாா்த்தாண்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஆன்மிக, சமுதாயப் பணிகள் செய்து வரும் அனஸ்வரா பவுண்டேசன் அமைப்பின் ஆண்டு விழா வியாழக்கிழமை (டிச. 25) தொடங்கி டிச. 28 வரை நடைபெறுகிறது.

விழாவில், தினமும் மாலை 5.30 முதல் இரவு 8 மணி வரை வாழும் கலை அமைப்பின் சா்வதேச ஆசிரியா் சஜீ நிஸான் பங்குபெறும் தொடா் சொற்பொழிவு நடைபெறுகிறது. தொடா்ந்து, பஜனை, மாா்த்தாண்டம் ஸ்ரீ சங்கரா நாட்டியப் பள்ளி மாணவியரின் பரத நாட்டியம் உள்ளிட்டவை நடைபெறும்.

செங்கல் சிவபாா்வதி கோயில் மடாதிபதி சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைக்கிறாா்.

டிச. 27ஆம் தேதி அனஸ்வரா பவுண்டேசன், நாகா்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை, நாகா்கோவில் பெஜன்சிங் கண் மருத்துவமனை, ராஜாஸ் பல் மருத்துவமனை, கன்னியாகுமரி மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.