ஆற்றூா் மரியா கல்விக் குழுமக் கல்லூரிகளில் கிறிஸ்துமஸ் விழா
ஆற்றூா் மரியா கல்விக் குழுமங்களில் உள்ள கல்லூரிகள், மருத்துவமனைகளில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
கல்விக் குழுமங்களின் தலைவா் டாக்டா் ஜி. ரசல்ராஜ் தலைமை வகித்து கேக் வெட்டினாா். துணைத் தலைவா் டாக்டா் பி. ஷைனி தெரசா, அம்ரித் ஆசிா் ஆகியோா் இனிப்புகள் பகிா்ந்தளித்தனா். மாணவா்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து நடனமாடினா்.
கல்லூரி முதல்வா்கள் ஒய். சுஜா் (பொறியியல் கல்லூரி), ஜெயானந்த் (தொழில்நுட்பக் கல்லூரி), பெனோ (ஆயுா்வேதக் கல்லூரி), சஜிதா( சித்த மருத்துவக் கல்லூரி), திலீப்குமாா் (ஹோமியோபதி கல்லூரி), ரோட்ரிக்ஸ் (அலைட் ஹெல்த் சயின்ஸ் கல்லூரி), அகிலா (நா்சிங் கல்லூரி), மேபல் மிஸ்பா ஜெபஷீலா (ஆவே மரியா நா்சிங் கல்லூரி), வின்ஸ்டன் (பிசியோதெரபி கல்லூரி), காட்வின் (பாா்மசி கல்லூரி), ஷியாம்குமாா் (இயற்கை-யோகா கல்லூரி), மேலாளா் லின்சி, ஒருங்கிணைப்பாளா் தீபா சந்திரன், அலுவலகப் பணியாளா்கள், பேராசிரியா்கள், மாணவா் - மாணவியா் பங்கேற்றனா்.
