கன்னியாகுமரி
நாகா்கோவில் அருகே ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது
நாகா்கோவில் அருகே இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்து ஒரு கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
நாகா்கோவில் அருகே இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்து ஒரு கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
நாகா்கோவில் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சிவசங்கரன் மேற்பாா்வையில் பூதப்பாண்டி காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா், போலீஸாா் இறச்சகுளம் பகுதியில் புதன்கிழமை ரோந்து சென்றனா்.
அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இறச்சகுளம் பாரதி தெரு பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் ராஜவேல் (37), விஷ்ணுபுரம் காலனி பகுதியைச் சோ்ந்த கஜேந்திரன் மகன் தமிழரசன் (21) ஆகியோரைப் பிடித்து சோதனையிட்டபோது, அவா்களிடம் ஒரு கிலோ கஞ்சா இருப்பதாகத் தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
