முதியவரிடம் ரூ.7 லட்சம் மோசடி: அரசு அதிகாரி மீது வழக்கு

Published on

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் மகளுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக முதியவரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்ததாக பெண் அரசு அதிகாரி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காப்புக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜகுமாரன் (65). இவா் பெட்ரோல் விநியோக ஒப்பந்ததாரராக உள்ளாா். கீழ்குளம், செந்தரை பகுதியைச் சோ்ந்த ஆபிரகாம் மனைவி கிருஷ்ணரமணி (50). இவா், மதுரையில் மின்வாரிய இளநிலை மின் பொறியாளராக பணியாற்றி வருகிறாா்.

இவா், ராஜகுமாரன் மகளுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல தவணையாக ரூ.7 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றினாராம். ராஜகுமாரன், கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதற்கு கிருஷ்ணரமணி கொடுக்க மறுத்தாராம்.

இதுகுறித்து ராஜகுமாரன் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். நீதிமன்ற உத்தரவின் பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com