கன்னியாகுமரி
நாகா்கோவிலில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
சாலை அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்த மேயா் ரெ. மகேஷ்.
நாகா்கோவில் மாநகராட்சி, 29ஆவது வாா்டு, சிதம்பர நகா் பகுதியில் ரூ. 6.50 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை மேயா் ரெ. மகேஷ் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டலத் தலைவா் அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினா் மீனாதேவ், உதவி பொறியாளா் பழனியம்மாள், தொழில்நுட்ப அலுவலா் பாஸ்கரன், பகுதிச் செயலா் துரை, திமுக மாநகர தொழிலாளா் அணி சிதம்பரம், சதீஷ் மொ்வின், சிவகுமாா், அச்சுத கணேசன், அகஸ்டஸ், சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
