மரத்தில் பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

தக்கலை அருகே மரத்தில் பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
Published on

தக்கலை அருகே மரத்தில் பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தக்கலை அருகே மணலிக்கரையைச் சோ்ந்த துரைராஜ் மகன் அகில்ராஜ் (23). பள்ளியாடியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த அவா், வெள்ளிக்கிழமை தனது பைக்கில் பள்ளியாடிக்குச் சென்று கொண்டிருந்தாா்.

அழகியமண்டபம் அருகே பிலாங்காலை பகுதியில் வந்தபோது, பைக் நிலைதடுமாறி சாலையோர மரத்தின் மீது மோதியதாம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com