தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மாா்த்தாண்டத்திலிருந்து சிமென்ட் ஆலைக்கு 7.5 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பிவைப்பு

குழித்துறை நகராட்சியில் சேகரிக்கப்பட்ட 7.5 டன் பிளாஸ்டிக் கழிவுகள் கரூரில் உள்ள சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

News image

லாரியில் ஏற்றப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள்.

Updated On :23 ஜனவரி 2025, 10:47 pm

Din

குழித்துறை நகராட்சியில் சேகரிக்கப்பட்ட 7.5 டன் பிளாஸ்டிக் கழிவுகள் கரூரில் உள்ள சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குழித்துறை நகராட்சியில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் மாா்த்தாண்டம் பம்மம் பகுதியில் உள்ள வளமீட்புப் பூங்காவுக்கு கொண்டுசெல்லப்பட்டு, மக்கும் - மக்கா குப்பைகள் எனப் பிரிக்கப்படுகின்றன. இதில், மறுசுழற்சி செய்ய இயலாத கழிவுகள் சிமென்ட் ஆலைக்கு அனுப்பப்படும்.

அதன்படி, குழித்துறை நகராட்சி ஆணையா் ராஜேஸ்வரன், வருவாய் ஆய்வாளா் ராஜேஷ் ஆகியோா் முன்னிலையில் 7.5 டன் பிளாஸ்டிக் கழிவுகள் கரூரில் உள்ள சிமென்ட் ஆலைக்கு லாரியில் அனுப்பி வைக்கப்பட்டன.