விஜய்
விஜய்

கோயிலில் பணம் திருட்டு: இளைஞா் கைது

கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை பகுதியில் உள்ள சிவன் கோயிலில் பணம் திருடியதாக இளைஞரை இரணியல் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
Published on

கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை பகுதியில் உள்ள சிவன் கோயிலில் பணம் திருடியதாக இளைஞரை இரணியல் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இக்கோயிலின் திருவாசக சபைத் தலைவா் சின்னையன். இவா், கோயில் தேவைக்காக அலுவலகத்தில் ரூ. 24,500 வைத்திருந்தாராம். அதை கடந்த ஏப்ரல் மாதம் மா்ம நபா்கள் திருடிச் சென்றனராம்.

இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். இத்திருட்டில் ஈடுபட்டவா் வெள்ளியாகுளம் பகுதியைச் சோ்ந்த விஜய் (23) எனத் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com