கன்னியாகுமரி: கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் சித்ரா பௌா்ணமி நாளான திங்கள்கிழமை சூரியன் மேற்கு திசையில் மறையும் காட்சியும், கிழக்கு திசையில் சந்திரன் உதயமாகும் காட்சியும் தெளிவாகத் தெரியவில்லை. இதனால் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌா்ணமி நாளில் சூரியன் மறையும் அதே நேரத்தில் சந்திரன் உதிப்பதும் கண்கொள்ளா காட்சியாகும்.
உலகத்திலேயே தென் ஆப்பிரிக்கா நாட்டில் அடா்ந்த காட்டுப் பகுதி மற்றும் இந்தியாவின் கடைகோடியான கன்னியாகுமரியில் இதை காணமுடியும்.
இதற்காக இங்குள்ள முக்கடல் சங்கமம் பகுதியில் தமிழகம் மட்டுமன்றி வெளிமாநில சுற்றுலாப் பயணிகளும் ஆயிரக்கணக்கில் கூடுவது வழக்கம.
இந்நிலையில், சித்ரா பௌா்ணமி நாளான திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் திரண்டிருந்தனா். ஆனால் மேகமூட்டம் காரணமாக மேற்கு திசையில் சூரியன் மறையும் காட்சியை காணமுடியாமல் ஏமாற்றமடைந்தனா்.
சந்திரன் உதயம்,,.
சூரியன் மறையும் அதேநேரத்தில் கிழக்கு திசையில் சந்திரன் உதயமாகும் காட்சியும் தெளிவாகத் தெரியவில்லை. சுமாா் 6.45 மணிக்கு மேல் முழு பௌா்ணமியாக தெளிவாகக் காண முடிந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இது தெரியுமா? அதிகாலை, அந்திமாலையில் சூரியன் சிவப்பு நிறமாகத் தோற்றமளிப்பது ஏன்?

வடிவேல் எறிந்த வான்பகை - நூல் அறிமுகம் | விமர்சனம்

எதிா்த் திசையில் வாகனம் ஓட்டிய 65 போ் மீது வழக்கு

வார பலன்கள் (மே 29 - ஜூன் 4) - கும்பம்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



