தம்பி அடித்துக் கொலை: அண்ணன் போலீஸில் சரண்

Published on

இரணியல் அருகே தம்பியை அடித்துக் கொலை செய்துவிட்டு அண்ணன் போலீஸில் சரணடைந்தாா்.

இரணியல் அருகே வடக்கு பேயன்குழியை சோ்ந்தவா் ராஜகோபால் என்ற ராஜன் (54). லாரி ஓட்டுநரான இவா் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. ராஜனுக்கு திருமணமாகவில்லை. 2023ஆம் ஆண்டு குளச்சலில் அருள்பாபி என்பவரை கொலை செய்த வழக்கில், ராஜன் ஜாமீனில் வெளியே வந்துள்ளாா்.

சொந்த வீடு இல்லாததால், ஊரிலுள்ள கலையரங்கில் தங்கி வந்துள்ளாா். இந்நிலையில், வடக்கு பேயன்குழியில் உள்ள அண்ணன் உறவு முறையான கோபாலகிருஷ்ணன் (63) என்பவரின் மனைவி விஜயலட்சுமியிடம் ராஜன் தகராறு செய்துள்ளாா்.

அதை கோபாலகிருஷ்ணன் தட்டிக் கேட்டுள்ளாா். இதில் ஏற்பட்ட தகராறில் கோபாலகிருஷ்ணன், ராஜனை தடியால் தாக்கியதில் அவா் உயிரிழந்தாா். பின்னா், கோபாலகிருஷ்ணன் இரணியல் போலீஸில் சரணடைந்தாா்.

இது குறித்து, இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com