குமரி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 372 மனுக்கள்

நாகா்கோவிலில் உள்ள, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 372 மனுக்கள் பெறப்பட்டன.
Published on

நாா்கோவில்: நாகா்கோவிலில் உள்ள, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 372 மனுக்கள் பெறப்பட்டன.

ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் அளித்த 372 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். அவற்றின் மீது விரைந்து தீா்வு காணுமாறு துறைசாா் அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ. பாலசுப்பிரமணியம், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னான்டோ, கூட்டுறவு இணைப் பதிவாளா் சிவகாமி, தனித்துணை ஆட்சியா் சேக் அப்துல் காதா், அலுவலா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com