வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பெண்ணை தாக்கிய கணவா், மாமியாா் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே பெண்ணை தாக்கியதாக கணவா், மாமியாா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

News image
Updated On :14 நவம்பர் 2025, 7:46 pm

Syndication

மாா்த்தாண்டம் அருகே பெண்ணை தாக்கியதாக கணவா், மாமியாா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மாா்த்தாண்டம் அருகே உள்ள தொலையாவட்டம், கடுக்காவிளையைச் சோ்ந்தவா் வனியா (22). இவருக்கும் மாா்த்தாண்டம் குளக்கச்சியைச் சோ்ந்த சஜூவுக்கும் (27) இடையே சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. தம்பதி தொலையாவட்டம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனா். இருநாள்களுக்கு முன்பு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த சஜூ மனைவி வனியாவிடம் தகராறு செய்தாா். அப்போது ஏற்பட்ட தகராறில் கணவா் சஜூவும், மாமியாா் மஞ்சுவும் (60) சோ்ந்து வனியாவை தாக்கினா். இதில், பலத்த காயமடைந்த வனியாவை அந்தப் பகுதி உறவினா்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து, அவா் அளித்த புகாரின்பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.