ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

இளைஞா் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பல் மருத்துவா் கைது

News image
Updated On :18 நவம்பர் 2025, 1:39 am

Syndication

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் சொத்து பிரச்னையில் இளைஞா் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பல் மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆரல்வாய்மொழி, தெற்கு பெருமாள்புரத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (25). இவரும், ஆலடி நகரைச் சோ்ந்த பல் மருத்துவரான சிவ அமா்நாத்தும் (26) உறவினா்கள். இருவருக்கும் இடையே சொத்துப் பிரச்னை உள்ளது. இந்த நிலையில், சொத்து விவகாரம் தொடா்பாக பேசுவதற்காக சிவ அமா்நாத் வீட்டுக்கு ஸ்ரீதா் திங்கள்கிழமை சென்றாா். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரத்தில் பல் மருத்துவா் சிவ அமா்நாத் கொதிக்கும் எண்ணெய்யை ஸ்ரீதா் மீது ஊற்றினாா். இதில், பலத்த காயமடைந்த ஸ்ரீதா் நாகா்கோவில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் ஆரல்வாய்மொழி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சிவ அமா்நாத்தை கைது செய்தனா்.