காா் மோதியதில் மூதாட்டி காயம்

மாா்த்தாண்டம் அருகே காா் மோதியதில் சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டி பலத்த காயமடைந்தாா்.
Published on

மாா்த்தாண்டம் அருகே காா் மோதியதில் சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டி பலத்த காயமடைந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே இடைக்கோடு, தேம்பாறவிளையைச் சோ்ந்தவா் கிருஷ்ணன்குட்டி மனைவி பேபி (65). இவா் திங்கள்கிழமை புத்தன்சந்தை பகுதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது மருதங்கோடு பகுதியைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (45) ஓட்டி வந்த காா் பேபி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு பாறசாலையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com