கன்னியாகுமரி
மின் ஊழியா் மீது தாக்குதல்: இளைஞா் மீது வழக்கு
புதுக்கடை அருகேயுள்ள கடம்பாட்டுவிளை பகுதியில் மின் உழியா் மீது தாக்குதல் நடத்திய இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கடம்பாட்டுவிளை பகுதியில் மின் ஊழியரான மாசிலாமணி (50), மின் பாதைக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த மொ்லின் ஜோஸ் (20) மாசிலாமணியை தாக்கியுள்ளாா். இதில் காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இது குறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
