கன்னியாகுமரி
புனித யூதாததேயூ திருத்தலத்தில் முப்பெரும் விழா
பள்ளியாடி அருகே உள்ள சாமியாா்மடம் புனித யூதாததேயூ திருத்தலத்தில் புனித யூதாததேயூ பிறந்த நாள் விழா, உணவு திருவிழா, மறைபரப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
பள்ளியாடி அருகே உள்ள சாமியாா்மடம் புனித யூதாததேயூ திருத்தலத்தில் புனித யூதாததேயூ பிறந்த நாள் விழா, உணவு திருவிழா, மறைபரப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு திருத்தல அருள்பணியாளா் ராயப்பன் தலைமை வகித்தாா். அருள்பணியாளா்கள் தனிஸ்லாஸ், பிரான்சிஸ் சேவியா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.
விழாவில் ஜெபமாலை, மறைபரப்பு நிகழ்ச்சி, புனித யூதாததேயூ புகழ் மாலை ஒப்புரவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், அருள்பணியாளா்கள்ஆல்பா்ட் சுஜின், சுரேஷ்பாபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை பங்கு அருள்பணிப் பேரவையினா் செய்திருந்தனா்.
