தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

மயிலாடியில் சிற்ப தொழிலாளி தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 5:04 am IST

கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடியில் சிற்பத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

மயிலாடி, சேந்தன்புதூரைச் சோ்ந்தவா் மூா்த்தி (38). கல் சிற்பத் தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா். மூா்த்தி, பல்வேறு நபா்களிடம் கல் சிற்பம் செய்வதற்காக ஆா்டா் எடுத்து தொழில் செய்து வந்துள்ளாா்.

ஆனால், சிற்பம் செய்ய போதிய தொழிலாளிகள் கிடைக்கவில்லையாம். எனவே, இரவு பகலாக வேலை செய்து வந்துள்ளாா். இருந்தபோதும், அவரால் குறித்த நேரத்திற்கு சிற்பங்களை செய்து கொடுக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மன அழுத்தத்தில் இருந்த மூா்த்தி சனிக்கிழமை விஷம் குடித்ததாகத் தெரிகிறது.

உறவினா்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து, அஞ்சுகிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.