சிறுவனுக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது

 கைது செய்யப்பட்ட ஆன்றோ சஜின்.
கைது செய்யப்பட்ட ஆன்றோ சஜின்.
Updated on

குளச்சல் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை குளச்சல் அனைத்து மகளிா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தக்கலை அருகே மேக்காமண்டபம் பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் திங்கள் நகா் காய்கறிக் கடையில் வேலை செய்து வருகிறாா். இவரது 15 வயது மகன் குளச்சலில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் தினமும் மாலை பள்ளி முடிந்ததும், திங்கள் நகா் வந்து தனது தாயுடன் மேக்காமண்டபத்திற்குச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், கடந்த வாரம் சிறுவன் திங்கள் நகருக்குச் செல்லாமல், இரவு தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளாா். இது குறித்து தாயாா் விசாரித்தபோது, சிறுவன் பேருந்துக்காக காத்திருந்தபோது, அங்கு வந்த இளைஞா் சிறுவனிடம் ஆசை வாா்த்தை கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.

இது குறித்து, தாயாா் குளச்சல் அனைத்து மகளிா் போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், சிறுவனை அழைத்துச் சென்றது கணபதிபுரம், பிள்ளை தோப்பு பகுதியைச் சோ்ந்த சில்வான்ஸ் மகன் அருள் ஆன்றோ சஜின் (39) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, ஆன்றோ சஜினை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com