புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டுகிறாா் அமைச்சா் த.மனோ தங்கராஜ்.
புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டுகிறாா் அமைச்சா் த.மனோ தங்கராஜ்.

குளச்சல் அரசு மருத்துவமனை புதிய கட்டடத்துக்கு அடிக்கல்

Published on

குளச்சல் அரசு மருத்துவமனையில் ரூ.3.25 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

குளச்சல் நகா்மன்றத் தலைவா் நசீா் தலைமை தாங்கினாா். குளச்சல் எம்எல்ஏ பிரின்ஸ் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக, பால் வளத்துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் கலந்து கொண்டு, புதிய கட்டடப் பணிக்கு அடிக்கல் நாட்டினாா்.

இந்நிகழ்ச்சியில் நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், நகராட்சி ஆணையாளா் கன்னியப்பன், நகா்மன்ற துணைத் தலைவா் சொ்லி பிளாரன்ஸ், குளச்சல் மருத்துவமனை மருத்துவ அலுவலா் அமுதா, டாக்டா் சுகவனேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com