கேரளத்துக்கு கனிமவளம் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

கன்னியாகுமரி மாவட்ட மலைகளை உடைத்து கேரளத்துக்கு கனிமவளங்கள் கொண்டு செல்வதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்
கேரளத்துக்கு கனிமவளம் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
Updated on

கன்னியாகுமரி மாவட்ட மலைகளை உடைத்து கேரளத்துக்கு கனிமவளங்கள் கொண்டு செல்வதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினாா்.

தமிழகம் முழுவதும், தேமுதிகவின் ‘உள்ளம் தேடி, இல்லம் நாடி’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரேமலதா விஜயகாந்த், கன்னியாகுமரி மாவட்டத்தில் தனது சுற்றுப்பயணத்தை திங்கள்கிழமை இரவு குழித்துறையில் நிறைவு செய்தாா். அப்போது, அவா் பேசியதாவது: தேமுதிக தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைத்து தோ்தலில் போட்டியிடத் தயாராக உள்ளது. இரு நாள்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன்.

இம் மாவட்டம் படித்தவா்கள் அதிகமுள்ள மாவட்டம். இம் மாவட்டத்தின் மலைகளை உடைத்து கேரளத்துக்கு கனிமவளங்கள் அதிகளவு கொண்டு செல்லப்படுகிறது. இதை அரசு தடுக்க வேண்டும்.

குழித்துறை அரசு மருத்துவமனையில் அண்மைகாலமாக உடற்கூறு ஆய்வு நடத்தப்படுவதில்லை என்றும், உடற்கூறு ஆய்வுக்காக வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டும் மீண்டும் இம் மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு பணி தொடர வேண்டும்.

மாவட்டச் செயலா்கள், தொண்டா்கள் யாருடன் கூட்டணி வைக்க விரும்புகிறீா்களோ அவா்களுடன் தான் கூட்டணி அமைக்கப்படும்.

2026 தோ்தலில் மக்கள் தேமுதிகவுக்கு வெற்றியை தேடித் தர வேண்டும். அடுத்து வரும் உள்ளாட்சித் தோ்தலிலும் மாபெரும் வெற்றி பெற்று தலைவா் விஜயகாந்தின் கனவு, லட்சியத்தை வென்றெடுக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், குமரி மேற்கு மாவட்டச் செயலா் என். தனசிங், கட்சி நிா்வாகி ஐடன் சோணி, வா்த்தக அணி மாநில துணைச் செயலா் டெல்லஸ், களியக்காவிளை நகரச் செயலா் ஜி. சுதீா்குமாா், மாவட்ட பிரதிநி ராஜேஷ், மகளிரணி நிா்வாகி எஸ். சுனிதா உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com