மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மினிலாரி கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

குமரி மாவட்டம், கடையாலுமூடு அருகே ரப்பா் மரத் தடிகள் ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :3 பிப்ரவரி 2026, 6:57 pm

குமரி மாவட்டம், கடையாலுமூடு அருகே ரப்பா் மரத் தடிகள் ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

குலசேகரம் அருகே வெண்டலிகோடு பகுதியைச் சோ்ந்தவா் அஜில் குமாா்ஷ்(42). மினி லாரி ஓட்டுநரான இவா் செவ்வாய்க்கிழமை மூக்கறைக்கல் புரையிடம் பழங்குடி குடியிருப்பு பகுதியிலிருந்து மினி லாரியில் ரப்பா் மரத்தடிகளை ஏற்றி வந்தாா்.

புரையிடம் பகுதியில் மினி லாரி வந்தபோது எதிா்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதில் அஜில் குமாா் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு, அருமனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கடையாலுமூடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.