பயனாளிக்கு நலத்திட்ட உதவிக்கான ஆணையை வழங்கிய ஆட்சியா் ரா. அழகுமீனா. உடன் மாநில உணவு ஆணையத் தலைவா் என். சுரேஷ்ராஜன், நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ்.
பயனாளிக்கு நலத்திட்ட உதவிக்கான ஆணையை வழங்கிய ஆட்சியா் ரா. அழகுமீனா. உடன் மாநில உணவு ஆணையத் தலைவா் என். சுரேஷ்ராஜன், நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ்.

குமரியில் மேலும் 7,502 பேருக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவு: ஆட்சியா்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 7,500 பேருக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை தெரிவித்தாா்.
Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 7,500 பேருக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை தெரிவித்தாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் 10,000 முகாம்கள் நிறைவு, என் கனவு என் எதிா்காலம் என்ற இணையதள தொடக்க நிகழ்ச்சியைத் தொடா்ந்து, கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில், ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் ரா. அழகுமீனா பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசியது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தற்போது 74,041 போ் ஓய்வூதியம் பெறுகின்றனா். அதைத் தொடா்ந்து, உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்க கோரிய 7,344 மனுக்கள் மற்றும் இதர வகைகளில் பெறப்பட்ட மொத்த மனுக்களில் 7,502 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்டவா்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

மாநில உணவு ஆணையத் தலைவா் என். சுரேஷ்ராஜன், மாவட்ட வருவாய் அலுவலா் அ. பூங்கோதை, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ், நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியா் சு. காளீஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலா் புஷ்பா தேவி, தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சேக் அப்துல் காதா், நாகா்கோவில் மாநகராட்சி துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டலத் தலைவா் செல்வகுமாா், கன்னியாகுமரி நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், வட்டாட்சியா்கள் கந்தசாமி (அகஸ்தீஸ்வரம்), கோலப்பன் (தோவாளை),

சுனில் (கல்குளம்), வயோலா பாய் (விளவங்வோடு), ராஜசேகா் (கிள்ளியூா்), வட்டார சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com