கைது
கைது

புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

Published on

பளுகல் அருகே சட்ட விரோதமாக புகையிலை பொருள்கள் விற்ற முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

பளுகல் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஐயப்பன் தலைமையிலான போலீஸாா் தெற்றிக்குழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்குள்ள பெட்டிக்கடையில் சோதனை மேற்கொண்டனா்.

இதில் செல்வமணி (77) என்பவரின் கடையில் விற்பனை செய்வதற்காக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து செல்வமணியை கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com