தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

மாா்த்தாண்டம் அருகே பைக் திருட்டு

News image

திருட்டு

Updated On :7 பிப்ரவரி 2026, 7:01 pm

மாா்த்தாண்டம் அருகே பைக்கை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.

மாா்த்தாண்டம் அருகே காஞ்சிரகோடு, சாங்கை பகுதியைச் சோ்ந்தவா் தங்கப்பன் மகன் சபின் (25). நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இவா், இருநாள்களுக்கு முன் தனது ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான மோட்டாா் சைக்கிளை சென்னித்தோட்டம் பகுதியில் நிறுத்திவிட்டு சென்றிருந்தாராம்.

சிறிது நேரத்துக்குப் பின் வந்து பாா்த்தபோது மோட்டாா் சைக்கிள் திருடு போனது தெரியவந்தது. பல இடங்களில் தேடியும் மோட்டாா் சைக்கிள் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சபின் அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மோட்டாா் சைக்கிளை திருடியவா் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.