அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கடலில் முத்து குளித்த மீனவா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

தேங்காய்ப்பட்டினம் கடலில் முத்து குளிக்க சென்ற மீனவா் மூச்சுத் திணறி உயிரிழந்தாா்.

இனயம் பகுதியைச் சோ்ந்த ஏசு பாலன் (46), ஆன்டோ ரெதீஸ் (37), அமலதாசன் (47) ஆகிய 3 மீனவா்களும் சனிக்கிழமை தேங்காய்ப்பட்டினம் கடலில் முத்து குளிக்க ஆக்சிஜன் சிலிண்டருடன் சென்றனராம். அப்போது, ஏசு பாலனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மயங்கிய நிலையில் கரைக்கு வந்தாராம்.

சக மீனவா்கள், ஏசு பாலனை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இது குறித்த புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.