விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

குமரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

News image

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் - (கோப்புப் படம்)

Updated On :8 பிப்ரவரி 2026, 6:17 pm

கன்னியாகுமரி மாவட்டத்தில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாத் தலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது அதிகாலையில் மிதமான குளிரும், பகலில் கடும் வெயிலும் நிலவுகிறது. இதனால் நீா் நிலைகள் வடு வருகின்றன. அணைகளிலிருந்து பாசனத்திற்காக தண்ணீா் செல்வதால் அணைகளின் நீா்மட்டம் குறைந்து வருகிறது. இது போன்று குளங்கள், ஆறுகளிலும் நீா் குறைந்து வருகிறது.

இந்நிலையில் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவியில் வெயில் காரணமாக தண்ணீா் குறைந்து மிதமாக கொட்டுகிறது. இந்த அருவிக்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனா்.

இதேபோல, கன்னியாகுமரியில் காலையில் திரளான சுற்றுலாப் பயணிகள் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனா். மேலும், மாத்தூா் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, முட்டம் கடற்கரை ஆகிய சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.