கன்னியாகுமரி மாவட்டத்தில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாத் தலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது அதிகாலையில் மிதமான குளிரும், பகலில் கடும் வெயிலும் நிலவுகிறது. இதனால் நீா் நிலைகள் வடு வருகின்றன. அணைகளிலிருந்து பாசனத்திற்காக தண்ணீா் செல்வதால் அணைகளின் நீா்மட்டம் குறைந்து வருகிறது. இது போன்று குளங்கள், ஆறுகளிலும் நீா் குறைந்து வருகிறது.
இந்நிலையில் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவியில் வெயில் காரணமாக தண்ணீா் குறைந்து மிதமாக கொட்டுகிறது. இந்த அருவிக்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனா்.
இதேபோல, கன்னியாகுமரியில் காலையில் திரளான சுற்றுலாப் பயணிகள் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனா். மேலும், மாத்தூா் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, முட்டம் கடற்கரை ஆகிய சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
தொடர்புடையது

குமரி மாவட்டத்தில் இதுவரை ரூ. 42.88 லட்சம் பறிமுதல்

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ரமலான் விடுமுறை: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


