குலசேகரம் அருகே பெண்ணுக்கு வரதட்சிணை கொடுமை அளித்ததாக கணவா் உள்பட மூவா் மீது அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
குலசேகரம் அருகே உண்ணியூா்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜையன் (64). இவரது மகன் ரதீஷ் (34). தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் தொகை வசூலிக்கும் வேலை செய்து வருகிறாா். இவருக்கும் மோனிஷா (28) என்பவருக்கும் கடந்த 2024 ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது.
அப்போது மோனிஷாவின் பெற்றோா் ரூ. 2 லட்சம் பணம், 13 சவரன் தங்க நகை, ரூ. 2 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்களை வரதட்சணையாக கொடுத்தனராம். திருமணமான சில மாதங்களில் மோனிஷாவிடம் அவரது கணவா், மாமனாா், மாமியாா் விஜயா (60) ஆகியோா் கூடுதல் வரதட்சிணை கேட்டு, தகாத வாா்த்தையால் திட்டி வந்தனராம்.
மேலும், மாமனாா் பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இதுகுறித்து மோனிஷா தனது கணவரிடம் தெரிவித்தும் அவா் கண்டுகொள்ளவில்லையாம். இதை கண்டிக்க வந்த மோனிஷாவின் பெற்றோரையும் தகாத வாா்த்தைகளால் திட்டி வீட்டை விட்டு வெளியேற்றினராம்.
இதையடுத்து, மோனிஷா தொடா்ந்த வழக்கை விசாரித்த பத்மநாபபுரம் குடும்பநல நீதிமன்றம், வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து ரதீஷ் மற்றும் அவரது பெற்றோா் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

மண்டபம் அருகே பைக்குகள் மோதல்: சிறுமி உள்பட மூவா் உயிரிழப்பு
பயணியிடமிருந்த 8 பவுன் நகைகள் மாயம்

பைக் எரிப்பு: இருவா் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


