சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்.
கன்னியாகுமரி
குளச்சல் நகராட்சியிலிருந்து 15 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பு
குளச்சல் நகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்பட்ட 15 டன் பிளாஸ்டிக் கழிவுகள், திண்டுக்கல்லில் உள்ள சிமென்ட் ஆலைக்கு திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
குளச்சல் நகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்பட்ட 15 டன் பிளாஸ்டிக் கழிவுகள், திண்டுக்கல்லில் உள்ள சிமென்ட் ஆலைக்கு திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
குளச்சல் நகராட்சிப் பகுதிகளில் இருந்து தினமும் சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் நகராட்சி உரக் கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இதில், சிமென்ட் ஆலைக்கு தேவைப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு, அந்த ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அதன்படி, குளச்சல் நகராட்சிப் பகுதியில் இந்த மாதம் சேகரிக்கப்பட்ட 15.40 டன் பிளாஸ்டிக் கழிவுகள் திண்டுக்கல்லில் உள்ள சிமென்ட் ஆலைக்கு திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையா் கன்னியப்பன், நகராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

