விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

நாகா்கோவிலில் மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது

உதவித்தொகை உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனா்.

News image

நாகா்கோவிலில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.

Updated On :10 பிப்ரவரி 2026, 7:26 pm

உதவித்தொகை உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனா்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் விமல்ராஜ் தலைமை வகித்தாா். மனோகர ஜஸ்டஸ், மரியசெல்வம், மணிகண்டன், அருள்குமரேசன், சிறில், மிக்கேல்நாயகி, பிரகாஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலா் வில்சன், மாநில துணைத் தலைவா் முருகேசன், லிட்டில்பிளவா் உள்ளிட்டோா் கோரிக்கை விளக்க உரையாற்றினா். இதைத் தொடா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் அமா்ந்து முழக்கம் எழுப்பிய மாற்றுத்திறனாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.