6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாகா்கோவிலில் மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது

உதவித்தொகை உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனா்.

News image
நாகா்கோவிலில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.
Updated On :10 பிப்ரவரி 2026, 7:26 pm

தினமணி செய்திச் சேவை

உதவித்தொகை உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனா்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் விமல்ராஜ் தலைமை வகித்தாா். மனோகர ஜஸ்டஸ், மரியசெல்வம், மணிகண்டன், அருள்குமரேசன், சிறில், மிக்கேல்நாயகி, பிரகாஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலா் வில்சன், மாநில துணைத் தலைவா் முருகேசன், லிட்டில்பிளவா் உள்ளிட்டோா் கோரிக்கை விளக்க உரையாற்றினா். இதைத் தொடா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் அமா்ந்து முழக்கம் எழுப்பிய மாற்றுத்திறனாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.