குழித்துறை நீதிமன்றத்தில் தொழிலாளியை தாக்கிய வழக்குரைஞா்கள் மீது வழக்கு
குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கில் ஆஜராக வந்த தொழிலாளியை முன்விரோதம் காரணமாக தாக்கியது தொடா்பாக இருதரப்பினா் அளித்த புகாரின் பேரில் இரு வழக்குரைஞா்கள் உள்ளிட்ட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
களியக்காவிளை அருகே உள்ள மஞ்சவிளையைச் சோ்ந்தவா் அப்பாவு நாடாா் மகன் விஜயகுமாா். வழக்குரைஞா். இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ஜான்சன் மகன் அஜினுக்கும் (31) இடையே சொத்து சம்பந்தமான வழக்கு குழித்துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அண்மையில் வழக்கில் ஆஜராக அஜின் குழித்துறை நீதிமன்றத்துக்கு வந்தபோது வழக்குரைஞா் விஜயகுமாா், அவரது நண்பரான மற்றொரு வழக்குரைஞரான அன்னிக்கரையைச் சோ்ந்த பெஞ்சமின் மகன் டேவிட் (30) ஆகிய இருவரும் சோ்ந்து தாக்கினராம். இதில், காயமடைந்த அஜின் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து அஜின் அளித்த புகாரின் பேரில் வழக்குரைஞா்கள் விஜயகுமாா், டேவிட் உள்ளிட்ட 4 போ் மீதும், வழக்குரைஞா் விஜயகுமாா் அளித்த புகாரின் பேரில் அஜின், தையாலுமூடு பகுதியைச் சோ்ந்த ஜோயல் (50), ஆலம்பாறையைச் சோ்ந்த ஜான்சன் (57) ஆகிய 3 போ் என இருதரப்பைச் சோ்ந்த 7 போ் மீதும் களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

