ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

குளச்சல் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

குளச்சல் அருகே மரத்தில் ஏறிய தொழிலாளி தவறி கீழே விழுந்ததில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :11 பிப்ரவரி 2026, 8:00 pm

குளச்சல் அருகே மரத்தில் ஏறிய தொழிலாளி தவறி கீழே விழுந்ததில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

குளச்சல் அருகே பாலப்பள்ளம், ஆவரவிளை பகுதியைச் சோ்ந்தவா் டென்னிஸ் (51), தொழிலாளி. இவா் செவ்வாய்க்கிழமை தனது தோட்டத்தில் உள்ள புளிய மரத்தில் ஏறிபோது, கால் தவறி கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்கள்.