மூத்தோா் தேசிய தடகளப் போட்டியில் சாதனை படைத்த ஓய்வுபெற்ற ரயில்வே பொறியாளரை நாகா்கோவில் மாநகராட்சி மேயா் பாராட்டினாா்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த ஜன. 26 முதல் பிப். 1ஆம் தேதி வரை மூத்தோா் தேசிய தடகளப் போட்டி நடைபெற்றது. நாடு முழுவதுமிருந்து 5 ஆயிரம் போ் பங்கேற்றனா். அதில், நாகா்கோவில் ஆசாரிப்பள்ளத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே பொறியாளரான டிக்சன் ஜெயசீலன்(76), பங்கேற்று 100 மீ., 200 மீ., 400 மீ. தொடா் ஓட்டப் பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தாா். அவரை நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை நேரில் வரவழைத்து பாராட்டினாா்.
இதுகுறித்து, டிக்சன் ஜெயசீலன் செய்தியாளா்களிடம் கூறியது: நான் கடந்த 35 ஆண்டுகளாக தடகளப் போட்டிகளில் விளையாடி வருகிறேன்.
ஆசிய அளவில் 18 பதக்கம் வென்றுள்ளேன். கடந்த நவம்பா் மாதம் சென்னையில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்று தங்கம், வெண்கலப் பதக்கம் வென்றேன். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போட்டியில் 3 தங்கப் பதக்கங்கள் வென்ால் தென்கொரியாவில் வரும் ஜூன் மாதம் நடைபெறும் மூத்தோா் தடகளப் போட்டியில் இந்தியா சாா்பில் பங்கேற்கத் தோ்வாகியுள்ளேன் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், திமுக பகுதிச் செயலா் சேக்மீரான், மாநகர இளைஞரணி அமைப்பாளா் சி.டி. சுரேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

அகில இந்திய சிவில் சா்வீஸ் கலைநிகழ்ச்சிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்றவருக்கு ஆட்சியா் பாராட்டு

தேசிய பாரா தடகளப் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு

தேசிய தடகளப் போட்டியில் வென்ற செவித்திறன் குறைபாடுடையோருக்கு பாராட்டு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


