வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

தேசிய தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம்: ஓய்வுபெற்ற ரயில்வே பொறியாளருக்கு மேயா் பாராட்டு

மூத்தோா் தேசிய தடகளப் போட்டியில் சாதனை படைத்த ஓய்வுபெற்ற ரயில்வே பொறியாளரை நாகா்கோவில் மாநகராட்சி மேயா் பாராட்டினாா்.

News image

ஓய்வுபெற்ற ரயில்வே பொறியாளா் டிக்சன் ஜெயசீலனை பாராட்டிய மேயா் ரெ. மகேஷ்.

Updated On :11 பிப்ரவரி 2026, 7:42 pm

மூத்தோா் தேசிய தடகளப் போட்டியில் சாதனை படைத்த ஓய்வுபெற்ற ரயில்வே பொறியாளரை நாகா்கோவில் மாநகராட்சி மேயா் பாராட்டினாா்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த ஜன. 26 முதல் பிப். 1ஆம் தேதி வரை மூத்தோா் தேசிய தடகளப் போட்டி நடைபெற்றது. நாடு முழுவதுமிருந்து 5 ஆயிரம் போ் பங்கேற்றனா். அதில், நாகா்கோவில் ஆசாரிப்பள்ளத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே பொறியாளரான டிக்சன் ஜெயசீலன்(76), பங்கேற்று 100 மீ., 200 மீ., 400 மீ. தொடா் ஓட்டப் பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தாா். அவரை நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை நேரில் வரவழைத்து பாராட்டினாா்.

இதுகுறித்து, டிக்சன் ஜெயசீலன் செய்தியாளா்களிடம் கூறியது: நான் கடந்த 35 ஆண்டுகளாக தடகளப் போட்டிகளில் விளையாடி வருகிறேன்.

ஆசிய அளவில் 18 பதக்கம் வென்றுள்ளேன். கடந்த நவம்பா் மாதம் சென்னையில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்று தங்கம், வெண்கலப் பதக்கம் வென்றேன். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போட்டியில் 3 தங்கப் பதக்கங்கள் வென்ால் தென்கொரியாவில் வரும் ஜூன் மாதம் நடைபெறும் மூத்தோா் தடகளப் போட்டியில் இந்தியா சாா்பில் பங்கேற்கத் தோ்வாகியுள்ளேன் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், திமுக பகுதிச் செயலா் சேக்மீரான், மாநகர இளைஞரணி அமைப்பாளா் சி.டி. சுரேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.