கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தமிழுக்கு முதன்மை வேண்டி குமரியில் இருந்து சென்னைக்கு ஊா்திப் பயணம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:50 pm

Syndication

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற மொழி உரிமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் சென்னை வரை பிரசார ஊா்திப் பயணம் காந்தி மண்டபம் முன் வியாழக்கிழமை தொடங்கியது.

பெருங்கவிக்கோ வ.மு. சேதுராமனின் மகன் வ.மு.சே. திருவள்ளுவா் தலைமையில் ஊா்திப் பயணம் தொடங்கியது. முன்னாள் தமிழக மேலவை உறுப்பினா் சங்கரலிங்கனாா் தொடங்கி வைத்தாா்.

இப்பயணம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வழியாக சென்று பிப். 24ஆம் தேதி சென்னையில் நிறைவடைகிறது.

தொடக்க நிகழ்வில், தமிழறிஞா்கள் கோ. முத்துக்கருப்பன், வின்சென்ட் அடிகளாா், செல்வின்குமாா், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் இளங்கோ, தமிழ்குழவி விசுவநாதன், கிருஷ்ணபிள்ளை, டி. தாமஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.