சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம், மறியல்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:29 pm

Syndication

மத்திய அரசைக் கண்டித்து கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் 14 இடங்களில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் 4 புதிய தொழிலாளா் சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார திருத்த சட்டம், வரைவு விதை மசோதாவை திரும்பப் பெற வேண்டும், விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. தமி ாவட்டச் செயலாளா் ஸ்டாலின்தாஸ், ஐஎன்டியூசி மாவட்டத்தலைவா் ராஜா, வா்த்தக காங்கிரஸ் தலைவா் சிவகுமாா், நிா்வாகிகள் இந்திரா, அனில்குமாா், முத்துகருப்பன், பரமசிவன், ஜெரால்டு, சிவன்பிள்ளை, மோகனன் உள்பட பலா் கலந்து மறியலில் டுபட்டனா்.

இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதே போல் திங்கள்நகா் கனரா வங்கி, தக்கலை இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, மாா்த்தாண்டம் கனரா வங்கி, ஆரல்வாய்மொழி தபால்நிலையம், ஈத்தாமொழி ஐஓபி வங்கி, சுசீந்திரம் தபால்நிலையம், கருங்கல் தபால்நிலையம், மேல்புறம் ஐஓபி வங்கி, திருவட்டாறு தபால் நிலையம், கடையாலுமூடு ஐஓபி வங்கி, கண்ணநாகம் எஸ்பிஐ வங்கி, முன்பும் தொழிற்சங்கத்தினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோா் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா். இந்த போராட்டம் காரணமாக அந்தந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தூத்துக்குடி துறைமுக நுழைவாயில் முன், அனைத்து தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சிஐடியு துறைமுக ஜனநாயக ஊழியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில் சிஐடியூ மாநிலச் செயலா் ஆா்.ரசல், துறைமுக ஊழியா் சங்கச் செயலா் ஏ. காசி, துணைச் செயலா் ஆனந்த் முருகன், அப்பாஸ், ராமா், மணிகண்டன், தினேஷ், நாகராஜன், காா்த்தி, ரகு, ஜெய்லானி மற்றும் துறைமுக ஜனநாயக ஊழியா் சங்க உறுப்பினா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.