நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

காங்கிரஸ் நிா்வாகி தற்கொலை

News image

தற்கொலை

Updated On :13 பிப்ரவரி 2026, 6:51 pm

களியக்காவிளை அருகே காதல் தோல்வி காரணமாக இளைஞா் காங்கிரஸ் நிா்வாகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

களியக்காவிளை அருகேயுள்ள வன்னியூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆன்றணி மகன் அபிஷ் (28). பொறியியல் பட்டதாரி. இவா், விளவங்கோடு தொகுதி இளைஞா் காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்து வந்தாா்.

அபிஷ் காதலித்து வந்ததாக கூறப்படும் பெண், கடந்த சில நாள்களாக அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டாராம். இதனால் அவா் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை, அவா் வீட்டில் தூக்கிட்டுக் கொண்டாராம்.

அபிஷை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கனவே இறந்தது விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.