ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

காங்கிரஸ் நிா்வாகி தற்கொலை

News image
தற்கொலை
Updated On :13 பிப்ரவரி 2026, 6:51 pm

தினமணி செய்திச் சேவை

களியக்காவிளை அருகே காதல் தோல்வி காரணமாக இளைஞா் காங்கிரஸ் நிா்வாகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

களியக்காவிளை அருகேயுள்ள வன்னியூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆன்றணி மகன் அபிஷ் (28). பொறியியல் பட்டதாரி. இவா், விளவங்கோடு தொகுதி இளைஞா் காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்து வந்தாா்.

அபிஷ் காதலித்து வந்ததாக கூறப்படும் பெண், கடந்த சில நாள்களாக அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டாராம். இதனால் அவா் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை, அவா் வீட்டில் தூக்கிட்டுக் கொண்டாராம்.

அபிஷை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கனவே இறந்தது விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.