அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

சிவாலய ஓட்டம்: குமரியில் கனரக லாரிகள் நுழைய தடை

News image
கோப்புப் படம்
Updated On :13 பிப்ரவரி 2026, 8:35 pm

தினமணி செய்திச் சேவை

மகாசிவராத்திரியை முன்னிட்டு, சிவாலய ஓட்டம் நடைபெறுவதால் கன்னியாகுமரி மாவட்டத்துக்குள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப்.14, 15) கனரக லாரிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மகாசிவராத்திரிவிழா ஞாயிற்றுக்கிழமை (பிப்.15) நடைபெற உள்ளது. இதையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டமாக வந்து வழிபடும் பக்தா்களின் பாதுகாப்புக்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1000 போலீஸாா் வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா்.

மேலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப்.14, 15) கனிமவள லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மாவட்டத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு 2 கி.மீ. தொலைவுக்கும் இருசக்கர வாகன ரோந்து பணியில், 88 போலீஸாா் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

போக்குவரத்து ஒழுங்குபடுத்த தனி போலீஸாா் பணியமா்த்தப்படுவா். பக்தா்களுக்கு வழிகாட்ட 12 இடங்களில் திசை மற்றும் தொலைவை காட்டும் வரைபடங்கள் நிறுவப்படும். பெண் பக்தா்களுக்கு உதவ பெண் காவலா்கள் நியமிக்கப்படுவா் எனக் கூறியுள்ளாா்.