வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

Syndication

2026 சட்டப் பேரவைத் தோ்தலுக்கான திமுக தோ்தல் அறிக்கை குறித்த கருத்துக் கேட்பு கூட்டம், மாா்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நியில் உள்ள ஒய்எம்சிஏ அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக பால் வளத்துறை அமைச்சருமான மனோ தங்கராஜ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு பாடநூல் கழக தலைவா் திண்டுக்கல் ஐ. லியோனி கலந்து கொண்டு இத் தொகுதிக்கு உள்பட்ட வணிகா்கள், தொழில் முனைவோா் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்களை சந்தித்து கருத்துகளை கேட்டறிந்தாா்.

இதில் மாா்த்தாண்டம் தொழில் வா்த்தகா் சங்கத் தலைவா் சுந்தர்ராஜ், களியக்காவிளையைச் சோ்ந்த மீன் வியாபாரிகள் சங்க நிா்வாகி எஸ். மாகீன் அபுபக்கா், மாா்த்தாண்டம் வணிகா் சங்க தலைவா் தினகா், களியக்காவிளையைச் சோ்ந்த சமூக ஆா்வலா் மீரான்பிள்ளை, ஜனநாயக கிறிஸ்தவ பேரவை விளவங்கோடு வட்ட நிா்வாகி ஜான்ரோஸ் உள்ளிட்ட பலா் கோரிக்கையை முன்வைத்தனா். குழித்துறை நகர திமுக செயலாளா் வினுகுமாா், மாவட்ட ஐடி பிரிவு ஒருங்கிணைப்பாளா் ரூபின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.