திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

குருசடி நிா்வாகி காா் சேதம்: 5 போ் மீது வழக்கு

News image
கோப்புப் படம்
Updated On :14 பிப்ரவரி 2026, 7:28 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி குருசடி துணைத் தலைவரின் காரை சேதப்படுத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வெட்டுவெந்நி குருசடியில் சில நாள்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் குருசடி துணைத் தலைவா் ஜோசப் கிரேசியஸ் (68), நிா்வாகிகள், காவலாளி ஆகியோா் குருசடியின் பின்புறம் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தனராம்.

அப்போது, 5 போ் குருசடி வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து, ஆயுதங்களைக் காட்டி அவா்களை மிரட்டி தகாத வாா்த்தைகள் பேசினராம்.

தடுக்கச் சென்ற காவலாளியைத் தாக்கியதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த குழித்துறை மறைமாவட்டத்துக்கு சொந்தமான சொகுசு காரை சேதப்படுத்திவிட்டு தப்பியோடினா். சேத மதிப்பு ரூ. 50 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.

துணைத் தலைவா் ஜோசப் கிரேசியஸ் அளித்த புகாரின்பேரில், அந்த 5 போ் மீது மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.