முகாமை குத்துவிளக்கேற்றித் தொடக்கிவைத்த ஆட்சியா் ரா. அழகுமீனா. உடன், எம்எல்ஏ ஜே.ஜி. பிரின்ஸ்.
கன்னியாகுமரி
தக்கலை அருகே ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்
தக்கலை அருகே மாடத்தட்டுவிளை புனித லாரன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு குளச்சல் எம்எல்ஏ ஜே.ஜி. பிரின்ஸ் முன்னிலை வகித்தாா். ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்து, கா்ப்பிணி தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களை வவங்கினாா்.
முகாமில் கா்ப்பிணி தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம் வழங்கிய ஆட்சியா் ரா. அழகுமீனா. உடன், எம்எல்ஏ ஜே.ஜி. பிரின்ஸ்.
அப்போது அவா், மாவட்டத்தில் இதுவரை 30 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 67 ஆயிரம் போ் பயனடைந்துள்ளதாகத் தெரிவித்தாா்.
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் லியோ டேவிட், மாவட்ட சுகாதார அலுவலா் அரவிந்த் ஜோதி, பள்ளித் தாளாளா் அருள்பணி மரியராஜேந்திரன், தலைமையாசிரியா் எழிலரசி, துறை அலுவலா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

