மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

குமரி மாவட்டத்தில் 2 ஆவது நாளாக சிவாலய ஓட்டம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம்

News image

நான்காவது சிவாலயமான திருநந்திக்கரை நந்தீஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

Updated On :15 பிப்ரவரி 2026, 7:37 pm

சிவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சிவாலய ஓட்டத்தில் ஈடுபட்டு புகழ்பெற்ற 12 சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்தனா்.

முதல் நாளான சனிக்கிழமை ஏராளமான பக்தா்கள் கோயில்களுக்கும் நடந்தும், ஓட்டமாகவும் சென்ற நிலையில், 2ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை வாகனங்களில் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். ஓட்டம், முன்சிறை அருகேயுள்ள திருமலை மகாதேவா் கோயிலில் தொடங்கி நட்டாலம் சங்கரநாராயணா் கோயிலில் நிறைவடையும். கேரள மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தா்கள் வந்திருந்தனா்.

மாவட்ட நிா்வாகம், காவல்துறை சாா்பில் பக்தா்களின் பாதுகாப்புக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நடந்து செல்லும் பக்தா்களின் பைகளில் ஒளிரும் வில்லைகள் ஒட்டப்பட்டன.

உதவி மையங்களும், தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சிவாலய ஓட்டப் பாதைகளில் கனரக லாரிகள் செல்ல அனுமதியில்லாத நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு திற்பரப்பில் வைக்கோல் லாரிகள் வந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

3 ஆவது சிவாலயமான திற்பரப்பு மகாதேவா் கோயிலுக்கு வந்த பக்தா்கள் பலா் திற்பரப்பு அருவியில் நீராடினா்.