சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பெரியவிளையில் இலவச கண் சிகிச்சை முகாம்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:15 pm

Syndication

மணவாளக்குறிச்சி ஐஆா்இஎல் இந்தியா லிமிடெட் சாா்பில் மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட பெரியவிளையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு ஐஆா்இஎல் மனிதவள மேலாண்மை துணை பொது மேலாளா் எம். பிரசாத் தலைமை வகித்தாா். அருள்சகோதரி அலெக்ஸ் மேரி முகாமை தொடங்கி வைத்தாா். மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவா் குட்டிராஜன் முன்னிலை வகித்தாா்.

அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் கண்புரை நோய், நீரிழிவு நோய், கண்ணீா் அழுத்த நோய், குழந்தை கண் நோய், கிட்டப்பாா்வை, தூரப்பாா்வை மற்றும் வெள்ளெழுத்து பரிசோதனைகளையும், அதற்கு சம்பந்தமான மருத்துவ ஆலோசனைகளையும், வழங்கினா்.

முகாமில் 513 போ் கலந்து கொண்டு பயனடைந்தனா். இவா்களில் 283 பேருக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

இதில், பங்கு பேரவை தலைவா் குணசீலன், செயலா் டென்சிலி, மணவாளக்குறிச்சி பேரூராட்சி உறுப்பினா்கள், ஐஆா்இஎல் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.